ரூ.2 லட்சம் ஊதியத்தில் தந்தையை வேலைக்கு அமர்த்திய 16 வயது சிறுவன்
16 year old raul john aju pay 2 lakhs salary for his dad: கேரளாவை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது நிறுவனத்தில், ரூ.2 லட்சம் ஊதியத்தில் தந்தையை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
16 வயதில் AI நிறுவனம் நடத்தும் சிறுவன்
எதிர்காலத்தில் பெரும்பாலான தொழில் மற்றும் வேலைகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இளம் தலைமுறையினர் பலரும் AI கருவிகளை பயன்படுத்த கற்று வருகின்றனர்.
ஆனால் 16 வயது சிறுவனான ரவுல் ஜான் அஜு(raul john aju0, 15க்கும் மேற்பட்ட AI கருவிகளை உருவாக்கி, AI நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

ரவுல் ஜான் அஜு, கேரளாவின் கொச்சி, குன்னம்புரத்தில் உள்ள வடக்கு இடப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் பிரிவில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரின் தந்தை அஜு ஜோசப், அடோப், அமேசான், விப்ரோ, ஐபிஎம் உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இதனால் 9 வயதிலே ரவுலிற்கு AI கருவிகளை பயன்படுத்தும் அனுபவம் கிடைத்தது. அந்த ஆர்வத்தில் AI குறித்து கற்றுக்கொண்ட அவர், AI கருவிகளை உருவாக்க தொடங்கியுள்ளார்.
தனது 12 வயதிலேயே, பள்ளி அறிவியல் திட்டப்பணிக்காக மீபாட் (MeBot) என்ற ரோபோவை அவர் உருவாக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து, ரெஸ்க்யூ ஏஐ (RESQ AI), ஸாப்கேப் (ZapGap), இன்வெஸ்டோ ஏஐ (Investo AI) மற்றும் ஃபீட்ஃபை (FeedFye) உட்பட 15க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை உருவாக்கியுள்ளார்.
மேலும், AI டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி 15 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். குறிப்பாக தனது தந்தையையும் மாதம் ரூ.2 லட்சம் ஊதியத்திற்கு வேலையில் அமர்த்தியுள்ளார்.

மேலும், தனது நிறுவனத்தின் மூலம் திங்க்கிராஃப்ட் அகாடமியை நடத்தி வருகிறார். ஐஐடி, ஐஐஎம், முன்னணி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பெருநிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், இதில் விளையாட்டு மூலம் எளிதாக செயற்கை நுண்ணறிவுத் திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள். இதன் மூலம் உலகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் AI திறனை கற்றுக்கொண்டுள்ளார்கள்.
டெல்லியில் நடைபெற்ற 2026 இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஐநா ஏற்பாடு செய்திருந்த அமர்வில் ரவுல் ஜான் அஜு பங்கேற்றார்.

என்னால் செல்போனில் அறிவை கற்றுக்கொள்ள முடிந்தாலும், சந்தைப்படுத்தல் உள்ளிட்டவற்றில் தந்தையின் அனுபவம் காரணமாக அவரை என் நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
இளமை காலத்தில் பலரும் தன்னுடைய தேவைக்கு பெற்றோரிடம் பணம் பெற்று வரும் சூழலில், ரூ.2 லட்சம் ஊதியத்தில் தந்தைக்கு வேலை வழங்கிய சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |