பிரித்தானியாவில் 160 ஆண்டு பழமையான தேவாலயத்தில் அசம்பாவிதம்! மொத்தமாக தீக்கிரையான சோகம்
பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தில் 160 ஆண்டு தொன்மையான தேவாலயலாம் ஒன்று இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் பாழடைந்தது.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ சிட்டி சென்டரில் உள்ளது செயின்ட் சைமன் ரோமன் கத்தோலிக்க பாரிஷ் தேவாலயம்.
16 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தேவாலயத்தில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
தேவாலயம் அமைந்துள்ள பேட்ரிக் பிரிட்ஜ் தெருவில் உடனடியாக 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டதாக ஸ்காட்டிஷ் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை தெரிவித்தது. அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.
மேலும் தேவாலயத்தைச் சுற்றி உள்ள வீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தீ விபத்தினால் ஏற்ப்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல் பரவியதால், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் சன்னல் மாறும் கதவுகளை அடைக்கமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் குறிப்பிடப்படவில்லை மற்றும் சுற்றுப்புற குடியிருப்புக்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவாலயம் முற்றிலுமாக தீக்கிரையானது, ஆனால் இன்னும் இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
செயின்ட் சைமன் தேவாலயம் 1858-ஆம் ஆண்டில் சார்லஸ் ஓ நீல் (Charles O’Neil) என்பவரால் கட்டப்பட்டது, முதலில் செயின்ட் பீட்டர்ஸ் என்று பெயரிடப்பட்டது, பிறகு 1956-இல் பெயர் மாற்றப்பட்டது.