வறுமையில் வாழும் 17 சதவிகித ஜேர்மானியர்கள்
ஜேர்மனியில், சுமார் 17 சதவிகிதம் பேர் வறுமையில் வாழ்வதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சிறார் வறுமை
வறுமையில் வாழ்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், வேலை செய்தும் வறுமையிலிருப்பவர்கள், அதாவது, சரியான வருவாய் இல்லாதவர்கள் என்கின்றன தொண்டு நிறுவனங்கள்.
குறிப்பாக, வறுமையில் வாழும் சிறார்களின் எண்ணிக்கை அதிர்ச்சியடைய வைப்பதாக அவை தெரிவிக்கின்றன. ஐந்தில் ஒரு சிறுவன் அல்லது சிறுமி, அல்லது அதற்கும் அதிகமானோர் வறுமையில் வாழ்வதாக கூறுகின்றன நல அமைப்புகள். விலைவாசி அதிகமாக இருப்பதால், தங்களால் சமாளிக்கமுடியவில்லை என்பதால், உணவு வங்கிகளை நாடுவதாகத் தெரிவிக்கிறான் ஒரு சிறுவன்.
வாரந்தோறும் உணவு வங்கிகளை நாடுபவர்கள் ஏராளம். உணவு வங்கிகள் இல்லையென்றால், தங்களால் சமாளிக்கவே முடியாது என்கிறார்கள் அவர்கள்.
மேலும், ஓய்வூதியம் பெறுவோரில் பலர் வறுமையில் வாடுவதாக தெரிவிக்கிறார்கள் நல அமைப்பினர். இப்படி அவர்களுக்கு உணவு வங்கிகள் உதவினால் போதாது, குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளுக்கான காப்பீட்டை அரசு அதிகரிக்கவேண்டுமென்கிறார்கள் அவர்கள்.
வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |