ஜேர்மனியில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள்: 174 பேர் கைது
ஜேர்மன் தலைநகர் பெர்லினில், அங்கீகரிக்கப்படாத பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை பொலிசார் கைது செய்தனர்.
174 பேர் கைது
நேற்று, அதாவது, புதன்கிழமை இரவு, பெர்லினிலுள்ள Neukölln எனுமிடத்தில், அங்கீகரிக்கப்படாத பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை பொலிசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் ஏற்பட்ட கைகலப்பில், 65 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெர்லினில் நிலைமை எப்படி இருந்தது?
பெர்லின் பொலிஸ்துறை தலைவரான Barbara Slowik கூறும்போது, Neuköllnஇல் நிலைமை பதட்டமாக காணப்பட்டதாக தெரிவித்தார்.
புதன்கிழமை அதிகாலை பெர்லினில் உள்ள யூத சமுதாயக் கூடம் ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுபோக, பிராங்பர்ட் உட்பட வேறு சில ஜேர்மன் நகரங்களிலும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த வார இறுதியிலும் பெர்லினில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் ஒன்றை பொலிசார் கலைத்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |