அமெரிக்கப் பள்ளியில் சுட்டுக்கொல்லப்பட்ட 19 பிள்ளைகள்... உயிர் துடிக்க ஓடும் பெற்றோர்: பதறவைக்கும் வீடியோ
தயவு செய்து இந்த துப்பாக்கிச் சட்டங்களை கடினமாக்க ஏதாவது செய்யுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முழங்காலில் நின்று கை கூப்பிக் கதறும் அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் மோசமடைந்துள்ளது.
1999 ஏப்ரல் மாதம் துவங்கி, 2022 மே மாதம் வரை, 121 பள்ளிப் பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1999 ஏப்ரலுக்கு முன்பும் இதே போல் சம்பவங்கள் நடந்துள்ளன என்றாலும், பத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்படத் துவங்கியது 1999 ஏப்ரலுக்குப் பிறகுதான்.
கொலராடோவிலுள்ள உயர் நிலைப் பள்ளியில், அன்று இரண்டு மாணவர்கள், தங்கள் சக மாணவர்கள் 12 பேரையும் ஒரு ஆசிரியரையும் சுட்டுக் கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்துகொண்டார்கள்.
அன்று தொடங்கியது, தற்போது டெக்சாசிலுள்ள Uvalde என்னும் இடத்தில் அமைந்துள்ள பிஞ்சுக் குழந்தைகள் பயிலும் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான், அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவன் ஒருவன்.
இந்நிலையில், தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை அறிந்ததும், உயிர் துடிக்க அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் பள்ளியை நோக்கி ஓடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், என்ன நடந்தாலும் அதை வேடிக்கை பார்ப்பதுடன், எல்லாவற்றையும் தங்கள் மொபைலில் வீடியோ எடுக்கும் ஒரு கூட்டம் உலகம் முழுவதும் இருக்கத்தான் செய்கிறது.
இந்த வீடியோவிலும், ஒரு பக்கம் பெற்றோர் பதற்றத்துடன் பள்ளியை நோக்கி ஓடிக்கொண்டிருக்க, அதையும் இரண்டு பேர் நின்று வீடியோ எடுத்துக்கொண்டிருப்பதைக் காணலாம்!