AI கற்றுக்கொடுத்து மாதம் ரூ.1 கோடி வருமானம் - அசத்தும் 19 வயது இளைஞர்
AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அனைத்து துறைகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பள்ளி மாணவர்கள் தொடங்கி, பெரும்பாலான துறையினர் தங்களது பணியில் AIயை பயன்படுத்துவது குறித்து கற்றுக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், 19 வயது இளைஞர் ஒருவர் AI குறித்த பயிற்சி வகுப்புகளை விற்பனை செய்து மாதத்திற்கு ரூ.1 கோடி அளவில் வருமானம் ஈட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.1 கோடி வருமானம்
Topmate.io தளத்தின் இணை நிறுவனரான மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான தினேஷ் சிங், இது குறித்த தகவலை தனது linkedin பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவில், ஆயுஷ் சிங் என்ற இளைஞர் IIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறவில்லை. வசதியான குடும்ப பின்னணியை கொண்டவர் இல்லை.
கோவிட் காலத்தில் அவரது குடும்பம் பொருளாதார நெருக்கடியில் இருந்தது. ஆனால், அவரிடம் இருந்ததெல்லாம் காலாவதியான பாடத்திட்டங்கள், மடிக்கணினி, சீரற்ற இணைய இணைப்பு அளவற்ற ஆர்வம் மட்டுமே.
அப்போது அவர் கடினமாக முயற்சித்து இயந்திர கற்றலை கற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் சில மாதங்களுக்குள்ளேயே அவர் வெளிநாடுகளில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் பணிபுரியத் தொடங்கியுள்ளார். மேலும், 14 வயதிலேயே அவரது பாடப்பிரிவைப் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (MIT) தனது வெளிப்படையாக பரிந்துரைத்தது.
ஆரம்பத்தில் அவர் பெரிதாக வருமானம் ஈட்டவில்லை. ஆனால், அவரது நிலைமையை மாற்றியது கூடுதல் நிபுணத்துவம் அல்ல, மாறாக அதை எப்படித் தொகுத்து விற்பனை செய்வது என்பதைக் கற்றுக்கொண்டதுதான்.
தற்போது AI குழுவை வழிநடத்தி மாதம் சுமார் ரூ.1 கோடி வருமானம் ஈட்டி வருகிறார்.
இன்று, அவர் இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான பொறியாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவைக் கற்பித்து, ஒரு காலத்தில் தங்களுக்கு எட்டாததாகத் தோன்றிய வேலைகளைப் பெற அவர்களுக்கு உதவுகிறார்.
ஆயுஷைப் போலவே, பெரும்பாலானவர்கள், மக்கள் பணம் கொடுத்து கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு விடயத்தை வைத்திருக்கிறார்கள், ஆனால் அவர்களில் கிட்டத்தட்ட யாருமே அதிலிருந்து ஒரு ரூபாய் கூட சம்பாதிப்பதில்லை" என தெரிவித்துள்ளார்.
அதற்கு கருத்து தெரிவித்துள்ள பயனர் ஒருவர், "இவ்வளவு இளம் வயதிலேயே இந்த குழந்தைகள் இவ்வளவு சாதிப்பதைப் பார்க்கும்போது, 28 வயதான நான் பொறாமையாகவும் மனச்சோர்வாகவும் உணர்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
Topmate.io என்பது பல்வேறு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும் தளமாகும்.
இதில் பயனர்கள், முன்னணி நிறுவனங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள், நிபுணர்கள் மற்றும் சிந்தனையாளர்களுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், பயிற்சி வகுப்புகள், மின்னணு புத்தகங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |