40 ஆண்டுகளுக்கு முன் கொடூரமாக சீரழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இரு பெண்கள்: சிக்கவைத்த DNA...

Ontario
By Balamanuvelan Nov 29, 2022 07:20 AM GMT
Report

கனடாவில் 40 ஆண்டுகளுக்கு முன் கொடூரமாக சீரழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பெண்கள் வழக்கில், குற்றவாளி தற்போது சிக்கியிருக்கிறார்.

1983ஆம் ஆண்டு ரொரன்றோவில் நடந்த பயங்கர கொலைகள்

1983ஆம் ஆண்டு ரொரன்றோவில் இரண்டு பெண்கள் கொடூரமாக வன்புணரப்பட்டுக் குத்திக் கொல்லப்பட்டார்கள்.

வளர்ந்துவரும் ஒரு ஃபேஷன் டிசைனராக இருந்த Erin Gilmour (22) என்ற இளம்பெண் வன்புணரப்பட்டு, கத்தியால் குத்திக்கொல்லப்பட்டிருந்தார்.

அவர் கொல்லப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு, Susan Tice (45) என்ற சமூக சேவகி அதேபோல வன்புணரப்பட்டு, கத்தியால் குத்திக்கொல்லப்பட்டிருந்தார்.

40 ஆண்டுகளுக்கு முன் கொடூரமாக சீரழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இரு பெண்கள்: சிக்கவைத்த DNA... | 1983 Toronto Cold Case Murders

Source: Ontario Police Department

இரண்டு பேரும் வெவ்வேறு நேரத்தில் கொல்லப்பட்டிருந்தாலும், 2000ஆம் ஆண்டு DNA சோதனைகளின் அடிப்படையில், இரண்டு குற்றங்களையும் செய்தது ஒரே நபர்தான் என தெரியவந்தது.

தற்போது அந்த கொலைகள் தொடர்பாக ஒன்ராறியோவில் வாழ்ந்துவந்த Joseph George Sutherland என்னும் 61 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட Joseph மீது Erin மற்றும் Susanஐக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Joseph கைது குறித்து பேசிய Erinஉடைய சகோதரரான Sean McCowan, Erin மற்றும் Susan கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சிக்கியுள்ள விடயம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது, நாங்கள் எங்கள் வாழ்நாளில் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தோம் என்று கூறியுள்ளார்.

40 ஆண்டுகளுக்கு முன் கொடூரமாக சீரழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இரு பெண்கள்: சிக்கவைத்த DNA... | 1983 Toronto Cold Case Murders

Source: Ontario Police

40 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய குற்றவாளி

பொலிஸ் துறை துப்பறியும் அதிகாரியான Steve Smith, இந்த குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும்போது, ஒரு குடும்பத்தின் மீது சந்தேகம் ஏற்பட அறிவியல் முன்னேற்றம் உதவியது. பின்னர் அந்தக் குடும்பத்தில் ஒரு குறிப்பிட்ட நபர் சிக்கினார் என்று கூறியுள்ளார். அதாவது DNA தொழில்நுட்பத்தின் உதவியால் குற்றவாளி சிக்கியுள்ளார்.

இவ்வளவு காலமும் இரண்டு கொலைகளையும் செய்த Joseph ரொரன்றோவிலேயேதான் வாழ்ந்துவந்துள்ளார் என்று கூறிய Smith, வழக்கு தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாக இதற்குமேல் இப்போதைக்கு விவரங்களை வெளியிடமுடியாது என்றார்.

டிசம்பர் மாதம் 9ஆம் திகதி Joseph நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US