எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த பார்வையற்ற ஆசியர்!
சீனாவைச் சேர்ந்த பார்வையற்ற Zhang Hong, உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய சாதனை படைத்துள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய உலகின் மூன்றாவது பார்வையற்றவர் மற்றும் ஆசியாவின் முதல் பார்வையற்றவராக Zhang Hong சாதனை படைத்தார்.
நேபாளத்திலிருந்து 3 மலை ஏறும் வழிகாட்டிகளுடன் மே 24 அன்று 8,849 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய 46 வயதான Zhang Hong, வியாழக்கிழமை அடிவாரத்திற்கு திரும்பினார்.
தென்மேற்கு சீன நகரமான Chongqing-ல் பிறந்த ஜாங் தனது 21 வயதில் glaucoma காரணமாக பார்வையை இழந்தார்.
2001 ஆம் ஆண்டில் எவரெஸ்ட்டை ஏறிய பார்வையற்ற அமெரிக்க மலையேறுபவரான Erik Weihenmayer என்பவரால் ஈர்க்கப்பட்ட Zhang Hong, அவரது மலை வழிகாட்டி நண்பர் கியாங் ஜியின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சியைத் தொடங்கினார்.
நீங்கள் ஊனமுற்றவராகவோ அல்லது சாதாரணமாகவோ இருந்தாலும், கண்பார்வை இழந்துவிட்டாலோ அல்லது கால்கள் அல்லது கைகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, உங்களுக்கு வலிமையான மனம் இருக்கும் வரை அது ஏதுவும் ஒரு பொருட்டல்ல, மற்றவர்கள் நம்மால் முடியாது என நினைக்கும் காரியத்தை எப்போதும் செய்து முடிக்க முடியும் என Zhang Hong கூறினார்.