காட்டுக்குள்ளிருந்து ஒலித்த சிறுவனின் அழுகுரல்: திடுக்கிடவைத்துள்ள தகவல்
வடமேற்கு பிரான்சில், வனப்பகுதி ஒன்றிற்குள்ளிருந்து ஒரு சிறுவனின் அழுகுரல் கேட்டதைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினருடன் பொலிசார் அங்கு விரைந்தும், அசம்பாவிதம் ஒன்றைத் தவிர்க்கமுடியாமல் போயுள்ளது!
காட்டுக்குள்ளிருந்து ஒலித்த சிறுவனின் அழுகுரல்
ஞாயிற்றுக்கிழமை மதியம், பிரான்சிலுள்ள Vilaine என்னும் நதி ஓடும் பகுதியில் வாழ்ந்துவரும் ஒரு 11 வயது சிறுவன், தான் தன் நண்பன் ஒருவனுடன் மீன் பிடிக்கச் செல்வதாக தன் தாயிடம் கூறிச் சென்றுள்ளான்.

ஆனால், அவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அவன் தாய் அவனைத் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்.

இதற்கிடையில், அந்த நதியருகிலுள்ள மரங்கள் அடர்ந்த பகுதியிலிருந்து ஒரு சிறுவனின் அழுகுரல் கேட்கவே, அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.
பொலிசார் மருத்துவ உதவிக்குழுவினருடன் அந்தப் பகுதிக்குச் செல்ல, அங்கு ஒரு சிறுவன் கழுத்தில் ஈரத்துணி இறுக்கப்பட்ட நிலையில் கிடந்திருக்கிறான்.

மாரடைப்பும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த சிறுவனைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல், அவனது உயிர் அங்கேயே பிரிந்துள்ளது.
பதின்மவயதினர் இருவர் கைது
இந்நிலையில், அதிர்ச்சியை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, திங்கட்கிழமையன்று 16 வயது சிறுவன் ஒருவனை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, 15 வயது சிறுமி ஒருத்தி பொலிஸ் நிலையத்துக்கு வந்து சரணடைய, அவளையும் கைது செய்த பொலிசார், அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |