விடுமுறையில் பணிக்கு சென்ற பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்! கதறும் பெற்றோர்
தமிழக மாவட்டம் விருதுநகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பாடசாலை மாணவர்கள்
விருதுநகர் மாவட்டம் மிதிலைக்குளம், புளியங்குளம் பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை இரு மாணவர்களான ஹரிஷ்குமார்(15), ரவிச்செல்வம்(17) தேர்வு விடுமுறையில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெல்டிங் ஒயரை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து, இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆட்சியர் உத்தரவு
மேலும் இந்த சோக சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தொழிலாளர் நலத்துறை விசாரணைக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் இருவர் கட்டுமானப்பணியின்போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.