உடல்கள் அழுகிய நிலையில் ஆற்றில் மிதந்த சடலங்கள்! விசாரணையில் வெளிவந்த அதிரவைக்கும் தகவல்
குழித்துறை ஆற்றில் மூதாட்டி மற்றும் இளைஞரின் சடலம் மிதந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மூதாட்டி மற்றும் இளைஞரின் சடலங்கள் மிதந்துள்ளது. இது குறித்து கிராமத்து மக்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் 2 சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடந்த பரிசோதனையில் ஆண் இறந்து 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் மூதாட்டி நேற்று இறந்து தெரிய வந்துள்ளது.
பொலிஸ் நடத்திய விசாரணையில் மூதாட்டி கொல்லங்கோடு கிராமத்தை சேர்ந்த பாத்திமா(65) என்று தெரிய வந்துள்ளது. கணவர் ஐந்து ஆண்டுக்கு முன் தவறிவிட்டதால் அவரது மகள் வீட்டில் தங்கியுள்ளார்.
2 நாட்களுக்கு முன் குருசடிக்கு செல்வதாக கூறி சென்ற மூதாட்டி பிணமாக தற்பொழுது திரும்பி வந்துள்ளார்.
மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலையா? என்ற நோக்கத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.