இந்த தடுப்பூசிகள் இந்திய மாறுபாட்டை தடுக்கிறது! பிரித்தானியா அரசு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை
இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாடு பிரித்தானியாவையும் உலுக்கி வரும் நிலையில் அதை தடுப்பதற்கு தடுப்பூசிகளுக்கு உள்ள திறன் குறித்து ஆய்வு மேற்கொண்ட பிரித்தானியா அரசு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, AstraZeneca அல்லது Pfizer தடுப்பூசிகளின் இரண்டு டோஸ் இந்தியா மாறுபாடு தொற்றை தடுப்பதில் 80 சதவீதத்திற்கு அதிகமான திறன் கொண்டது என ஆய்வில் கண்டறிந்துள்ளது.
ஆய்வின் கண்டுபிடிப்புகள் அரசாங்கத்தின் புதிய மற்றும் அதிகரித்து வரும் வைரஸ் அச்சுறுத்தல்கள் ஆலோசனைக் குழுவின் (Nervtag) கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கென்ட் மாறுபாட்டிலிருந்து இந்த இரண்டு டோஸ்களும் 87 சதவீத பாதுகாப்பை வழங்குகிறது என்பதையும் இங்கிலாந்து பொது சுகாதாரம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
B. 1.617.2 என அழைக்கப்படும் இந்திய மாறுபாடு மற்ற வகைகளை விட 50 சதவீதம் அதிகமாக பரவக்கூடியதாக இருக்கும் என்று மரபணு நிபுணர் எச்சரித்திருந்த நிலையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.