ஆவலுடன் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பு..! 2 டோஸ் தடுப்பூசி போட்ட வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய விதிகளை வெளியிட்டது பிரித்தானியா!
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து பிரித்தானியா வரும் இரண்டு டோஸ் தடுப்பூசி பயணிகள் தனிமைப்படுத்த தேவையில்லை என போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் 2ம் திகதி காலை 4 மணி முதல் இந்த விதி அமுலுக்கு வரும் என ஷாப்ஸ் அறிவித்துள்ளார்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் பிரித்தானியாவில் உள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை மீண்டும் ஒன்றிணைக்க நாங்கள் உதவுகிறோம் என ஷாப்ஸ் ட்விட் செய்துள்ளார்.
ஆகஸ்ட் 2 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அம்பர் நாட்டிலிருந்து பிரித்தானியா வர முடியும், அவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் தனிமைப்படுத்தப்பட தேவையில்லை.
FDA அல்லது EMA-வால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு இந்த விதி பொருந்தும்.
The changes will apply to fully vaxxed people with an FDA or EMA vaccine 💉 - they’ll still need to do the usual pre-departure test before arrival and take a PCR test on day 2 of returning to the England.
— Rt Hon Grant Shapps MP (@grantshapps) July 28, 2021
பயணிகள் புறப்படுவதற்கு முன் சோதனை செய்ய வேண்டும் மற்றும் பிரித்தானியா திரும்பிய இரண்டாம் நாளில் பி.சி.ஆர் சோதனை எடுக்க வேண்டும் என ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.