ஐபிஎல் தொடர் இந்தாண்டு நடத்த வாய்ப்பு இல்லை! கங்குலி திட்டவட்டம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிசிசிஐ தலைவரான கங்குலி, இந்தாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்த வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்தியாவில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் கொரோனா பரவலுக்கு மத்தியில் மிகவும் பாதுகாப்பாக நடைபெற்று வந்தது. இருப்பினும் வீரர்கள் சிலருக்கு கொரோனா பரவல் உறுதியானதால், தொடர்ந்து தொடர்ந்து நடத்தினால் வீரர்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்று ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரை நடத்தி வரும் பிசிசிஐ ஐபிஎல் தொடர் இந்தாண்டு மீண்டும் இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது.
இது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில், இந்தியாவில் நிலைமை எப்போது கட்டுக்குள் வரும் என்று தெரியவில்லை இரண்டாவது அலை முடிந்து மூன்றாவது நிலை அக்டோபர் நவம்பர் மாதங்களில் வரும் என்று மருத்துவ குழுவினர் கூறியுள்ளதால் நிச்சயம் இந்தியாவில் இந்த தொடரை நடத்த வாய்ப்பு இல்லை என கங்குலி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதனால் ஐபிஎல் தொடர் எப்படியும், இந்த முறையும் கடந்த ஆண்டு போன்று ஐக்கிய அரபு அமீரகத்திலே நடத்தப்படும் என்று நம்பப்படுகிறது.