2012-ல் இறந்தவருக்கு 2019-ல் லட்சக்கணக்கில் கடன்! அதிர்ந்து போன அதிகாரிகள்
தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு இறந்தவருக்கு 2019-ஆம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் கொடுத்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டம், இடைப்பாடி, வெள்ளரி வெள்ளியில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி கடந்த 2016 மற்றும் 2021-ஆம் ஆண்டில் அரசு தள்ளுபடி செய்த கடன்களில் முறைகேடு நடந்துள்ளதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது.
இதையடுத்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பல உண்மைகள் தெரியவந்துள்ளது. இது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேட்டுவப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி(58) சங்க உறுப்பினரான இவர், கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறந்துவிட்டார். ஆனால், அவர், 2019-ஆம் ஆண்டு சங்கத்தில், ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை கட்ட அறிவுறுத்தியும், கூட்டுறவு சார்பதிவாளர் கடந்த டிசம்பர் மாதம் சம்மன் அனுப்பியுள்ளார்.
ராமசாமியின் மகன் சித்துராஜ் அவர் முன் ஆஜராகி, தந்தை இறந்தாக கூறிய பின்பே இந்த விஷயம் தெரியவந்தது. மேலும், அவர் பெயரில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சித்துராஜ் வலியுறுத்தினார்.
இதனால், 2016, 2021-ல், தள்ளுபடி செய்த விவசாய கடன்களை முழுமையாக விசாரித்து, முறைகேடான கடன்களை வசூலிக்குமாறு, சங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.