சுருண்டது ராஜஸ்தான்! மீண்டும் சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது டெல்லி
அபு தாபியில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானை ஊதி தள்ளி புள்ளிப்பட்டியிலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி அணி.
2021 ஐபிஎல் தொடரில் செப்டம்பர் 25ம் திகதி இன்று அபு தாபியில் நடந்த 36வது போட்டியில் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 2வது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் பேட்டிங் செய்த ரிஷ்ப் பந்த் தலைமையிலான டெல்லி அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
பிரித்வி ஷா (10), தவான் (8), ஸ்ரேயாஸ் ஜயர் (43), பந்த் (24), Hetmyer (28), அகசர் படேல் (12) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கடைசி வரை லலித் யாதவ் (14), அஸ்வின் (6) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ராஜஸ்தான் அணி தரப்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரஹ்மான், சகரியா தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்து சுருண்டது.
#IPL2021: Delhi Capitals beat Rajasthan Royals by 33 runs. #DCvRR pic.twitter.com/COqza8Xzmr
— Doordarshan Sports (@ddsportschannel) September 25, 2021
இதன் மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை டெல்லி அணி பதிவு செய்துள்ளது.
அதுமட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே-வை (14) இரண்டாவது இடத்திற்கு தள்ளி 16 புள்ளகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது டெல்லி.