கடந்த சீசனை விட இந்த ஐபிஎல்லில் சம்பளத்தை குறைத்த வீரர்கள்! யார் யார் தெரியுமா?
ஐபிஎல் தொடரில் கடந்த சீசனை விட இந்த முறை குறைந்த தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், இந்த முறை 10 அணிகளுடன் அடுத்த ஆண்டு கோலகலமாக நடைபெறவுள்ளது.
இதற்காக ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் இருக்கும் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொண்டு, மற்ற வீரர்களை ஏலத்தில் விட்டு விட வேண்டும். இதையடுத்து கடந்த 30-ஆம் திகதி கடைசி நாள் என்பதால், அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
இதில் சில வீரர்கள் முன்பு எடுக்கப்பட்ட ஏல தொகையை விட, குறைந்த விலைக்கே தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கொல்கத்தா அணி தக்க வைத்துக் கொண்டுள்ள சுனில் நரைனை அந்தணி தற்போது 6 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளது.
ஆனால், கடந்த சீசனின் இவருடைய சம்பள தொகை 12.5 கோடியாக இருந்தது. அதே போன்று, கடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியலில், மேக்ஸ்வேல் இருந்தார்.
இவரை பெங்களூரு அணி 14.25 கோடிக்கு வாங்கியது. இப்போது இவரை அதே அணி 11 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இவரைத் தொடர்ந்து இதே பெங்களூரு அணியில், அந்தணியின் கேப்டன் ஆன விராட் கோலி, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏலத்தில் 17 கோடிக்கு வாங்கப்பட்டார். தற்போது இவரை அந்தணி 15 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
சென்னை அணியின் கேப்டன் ஆன டோனி, கடந்த ஏலத்தில் 15 கோடிக்கு வாங்கப்பட்டார். இப்போது அவரை சென்னை அணி 12 கோடிக்கு தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.