உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தர (2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்தில் வெளியிடப்படும் பரீட்சை திணைக்கள் வட்டாரங்களால் தெரியவந்துள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் தோன்றிய அனைத்து மாணவர்களுக்கும் இம்மாதம் இறுதி வாரத்தில் பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரியவந்துள்ளது.
இந்த பரீட்சைக்கு சுமார் 346,976 மாணவர்கள் தோன்றியுள்ளனர். இவர்களில் 281445 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65531 தனியார் விண்ணப்பதாரர்களும் ஆவர்.
மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை இம்மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |