10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது - எந்த மாவட்டம் முதலிடம்?
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 11 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.

சுமார் 8.82 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய இந்த தேர்வுக்கான முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார்.
பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி www.tnresults.nic.in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இதே போல் 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ்அப்பிற்கே வந்துவிடும்.

மொத்தமாக 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.51% அதிகம் ஆகும். இதில் மாணவர்கள் 92.15% பேரும், மாணவிகள் 96.47% பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
97.57% உடன் புதுக்கோட்டை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 97.54 சதவீதத்துடன் சிவகங்கை 2வது இடத்திலும், 97.41 சதவீதத்துடன் தஞ்சாவூர் 3வது இடத்திலும், 97.40சதவீதத்துடன் திருச்சி 4வது இடத்திலும், 97.30 சதவீதத்துடன் கன்னியாகுமரி 5வது இடத்திலும் உள்ளது.
மொத்தம் 5171 பள்ளிகள் 100% தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. அதில் 1931 அரசு பள்ளிகள் அரசு பள்ளிகள் ஆகும்.
தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மே 26 ஆம் தேதி முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 8 முதல் ஜூலை 15 வரை துணைத்தேர்வு நடைபெறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |