ஒன்லைன் செயலில் கடன் பெற்ற 22 வயது இளைஞர் தற்கொலை! அதிர்ச்சி சம்பவம்
தமிழக மாவட்டம் கிருஷ்ணகிரியில் ஒன்லைன் செயலில் கடன் பெற்ற இளைஞர், விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பொறியாளர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பொறியாளர் வசந்த். இவர் செங்கல்பட்டு மாவட்டம் பள்ளியகரம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் வசந்த் தங்கியிருந்த விடுதியில் அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
அப்போது அவர் தனது சிம்கார்டை உடைத்து இருப்பது தெரிய வந்தது. அதன் பின்னர் விடுதியில் தங்கியிருந்த நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வசந்த் ஒன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியிருந்தது தெரிய வந்தது.
கடனை செலுத்த முடியாததால் தற்கொலை
அதனை செலுத்த முடியாமல் தவித்த வசந்த், தனது குடும்பத்தினரிடம் இருந்து அடிக்கடி பணம் பெற்று வந்துள்ளார். இவ்வாறாக ஒரு லட்சம் ரூபாய் வரை அவர் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். வசந்த்தின் செல்போனில் உள்ள தகவல்களை டிராக் செய்து அதில் இருக்கக்கூடிய தகவல்களை சேகரிக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.