கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 22 வயது இந்தியர்: இந்திய அதிகாரிகள் அளித்த பதில்
கனடாவில் இருந்து 22 வயது இந்தியர் ஒருவர் நாடு கடத்தப்பட்டதை அந்நாட்டு சர்ரே காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
நாடு கடத்தப்பட்ட இந்தியர்
கனடாவில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த 22 வயது வயதான லவ்பீர் சிங்(Lovebir Singh) கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக கனடா அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக, 22 வயது வயதான லவ்பீர் சிங் என்ற இந்திய இளைஞர் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதை சர்ரே காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காவல்துறையின் புதிய உத்தி
கடந்த 2023ம் ஆண்டு கனடாவிற்கு வந்த லவ்பீர் சிங், 2026 ஆம் ஆண்டு காவல்துறையின் நேரடி கண்காணிப்பிற்கு கீழ் கொண்டு வரப்பட்டார்.
குற்ற கும்பலுடன் அவரது தொடர்பை உறுதிப்படுத்திய சர்ரே பொலிஸார், கனடாவின் எல்லை பாதுகாப்பு முகமையுடன்(CBSA) இணைந்து அவரை கைது செய்து அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது.
சர்ரே பொலிஸார் வழக்கத்திற்கு மாறாக லவ்பீர் சிங்கின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து தகவல் அளிக்க முடியும் என்றும், மேலும் இது போன்ற குற்ற கும்பல்களின் செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
லவ்பீர் சிங் நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அவர் இந்திய குடியுரிமை கொண்டவர் என்பது உறுதி செய்யப்பட்டால், அவரை திரும்ப பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எட்மண்டன் நகரில் கைது செய்யப்பட்ட அர்ஷ்தீப் சிங் என்ற மற்றொரு இந்தியரும் நாடு கடத்தப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |