திருமண வரவேற்பில் நடனமாடிய 23 வயது பெண் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடனத்தின்போது மயக்கம்
கர்நாடக மாநிலம் உடுப்பு மாவட்டத்தில் உள்ள ஹவாஞ்சே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஜோஸ்னா லூயிஸ்(23).
இவர் தனது உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் பாடல் ஒன்றுக்கு ஜோஸ்னா உற்சாகமாக நடனமாடினார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக ஜோஸ்னாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அதனைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
23 வயதில் மரணம்
மாரடைப்பு காரணமாக இளம்பெண் ஜோஸ்னா உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இளம் பருவத்தினர் பலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம் பவங்கள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.