உலகின் மிகவும் ஆபத்தான 24 நாடுகள்... பிரித்தானிய மக்களுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை
பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் 24 நாடுகளுக்கு பயணப்பட வேண்டாம் என்ற அறிவுரையை குடிமக்களுக்கு வழங்கியுள்ளது.
எதிர்பாராத சில நாடுகள்
தொடர்புடைய நாடுகளுக்கு பிரித்தானிய நிர்வாகம் பயணத் தடை விதித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் உட்பட எவரும் பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பட்டியலில் எதிர்பார்த்த சில நாடுகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், எதிர்பாராத சில நாடுகளும் இணைக்கப்பட்டுள்ளது. மிக அவசரப் பயணங்கள் மட்டுமே இந்த 24 நாடுகளுக்கும் அனுமதிக்கப்பட உள்ளது.
இதில், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், புர்கினா பாசோ, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், ஹைட்டி, ஈரான், ஈராக், இஸ்ரேல், லெபனான், லிபியா, மாலி மற்றும் நைஜர் உள்ளிட்ட நாடுகளும்,
அத்துடன் வட கொரியா, பாலஸ்தீனிய பிரதேசங்கள், ரஷ்யா, சோமாலியா, சோமாலிலாந்து, தெற்கு சூடான், சூடான், சிரியா, உக்ரைன், வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளும் பட்டியலிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்படும் நெருக்கடி
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், அந்த நாட்டுக்கு பிரித்தானிய மக்கள் பயணிப்பது ஆபத்தில் முடியலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரித்தானிய மக்கள் கைது செய்யப்படும் நெருக்கடியான சூழலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடரும் நிலையில், ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், வெளிவிவகார அமைச்சகத்தின் அறிவுரையை நாடிய பின்னர் ரஷ்ய பயணம் மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், வெளிவிவகார அமைச்சகத்தின் எச்சரிக்கையை மீறி பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியர்களின் பயண காப்பீடு செல்லுபடியாகாமல் போகவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் ரஷ்யாவுக்கு சென்று திரும்பியுள்ளதை குறிப்பிட்டு, பிரித்தானியர்கள் கண்டிப்பாக செல்லவேண்டிய நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று என குறிப்பிட்டு, போர் முடியும் வரையில் காத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |