பிரித்தானியாவில் இந்த 25 பகுதிகளில் இந்தியாவின் டெல்டா வகை கொரோனா பரால் தீவிரம் உள்ளது! எச்சரிக்கை தகவல்
பிரித்தானியாவில், இந்தியா மாறுபாட்டின் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் 25 இடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் குறைந்து வந்த நிலையில், 25 பகுதிகள், மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது. இந்தியா மாறுபாட்டு வைரஸான டெல்டா வேகமாக பரவி வருவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
The Zoe Covid Symptom ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் அடிப்படையில் கண்காணிப்பு பட்டியலை உருவாக்கியுள்ளது.
ஸ்காட்லாந்தின், Stirling மாறுபாட்டின் மிக உயர்ந்த பாதிப்பைக் கொண்டுள்ளது. வழக்குகள் இன்னும் அதிகரித்து வந்து கொண்டே இருக்கிறது. இதைத் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில், Manchester, Rochdale மற்றும் Bolton ஆகிய பகுதிகளில் இந்த தொற்றின் தீவிரம் உள்ளது.
இது மூன்றாவது அலையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இடமாக கூறப்படுகிறது. இந்தியாவில் கண்டுபிடிக்க உருமாறிய டெல்டா மாறுபாடு ஆல்பா மாறுபாட்டை விட 60 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரித்தானியாவின் kent-ல் அடையாளம் காணப்பட்டது. இளைஞர்கள் மற்றும் சிலருக்கு மட்டுமே இந்த தொற்று இருந்தது. இந்த தொற்றினால்இறப்புகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கை குறைவாக இருக்கக்கூடும் என்ற நம்பப்படுகிறது.
இருப்பினும், பொது சுகாதார இங்கிலாந்தின் (PHE) சமீபத்திய தகவல்கள் இங்கிலாந்தில் வழக்கு விகிதங்கள் கிட்டத்தட்ட எல்லா வயதினரிடையேயும் உயர்ந்துள்ளன என்பதைக் காட்டுகிறது,
இது 20 முதல் 29 வயதுடையவர்களிடையே அதிகமாக பரவி வருகிறது. ZOE COVID ஆய்வு பயன்பாட்டின் முன்னணி விஞ்ஞானி டிம் ஸ்பெக்டர் கூறுகையில், பிரித்தானியா கொரோனாவை மிக சரியாக கையாண்ட நாடுகளில் உள்ளது.
ஆனால், இப்போது அதுவேவிரைவாக உயர்ந்து வரும் புதிய வைரஸுடன் போராடும் நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணம், சமூக இடைவெளியை ஒழுங்காக பின்பற்றாதது தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
ஒவ்வொரு நாளும் 11,908-பேர் புதித்தாக பாதிக்கப்படுவதாக கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, ZOE மதிப்பிடுகிறது - இது முன்பை விட 110 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.
இங்கிலாந்தில் சராசரியாக 543 பேரில் ஒருவருக்கு தற்போது இந்த தொற்றின் அறிகுறி உள்ள நிலையில், அதிகமாக பரவல் கொண்ட 25 பகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.