காணாமல் போன இளம்பெண் எரிந்த நிலையில் சடலமாக.. வேறு மாநிலத்தில் மீட்பு! கதறி அழுத பெற்றோர்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காணாமல் போன இளம்பெண்
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவைச் சேர்ந்த தனுகுர்ரே(26) என்ற இளம்பெண், ராய்ப்பூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். அவர் கடந்த மாதம் 21ஆம் திகதி தனுவை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணை தொடங்கியபோது, குறித்த பெண் காணாமல் போனதாக கூறப்பட்ட நாளில் ஒடிசாவைச் சேர்ந்த சச்சின் அகர்வால் (28) என்பவருடன் பலங்கிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
எரிந்த நிலையில் மீட்பு
அவரைப் பிடித்து விசாரித்த பொலிஸார், சில நாட்களுக்கு முன்பு பலங்கிர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணிடம் உடலைக் கைப்பற்றினர்.
பின்னர் தனுவின் பெற்றோரை அழைத்து வரப்பட்டுபோது, அவர்கள் தங்கள் மகளை அடையாளம் காட்டினர்.
சுட்டுக் கொலை
தனு குர்ரே அவரது ஆண் நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பின்னர் ஆதாரங்களை அழிப்பதற்காக அவர் எரிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.
சச்சின் அகர்வாலை கைது செய்த பொலிஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.