ஓடும் ரயிலுக்குள் சக பயணிகளை தீ வைத்து எரித்த நபர்: தண்டவாளத்தின் அருகே கிடந்த சடலங்கள்!
ஓடும் ரயிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சக பயணிகளை தீ வைத்து எரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலுக்குள் தீ வைப்பு
ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சக பயணிகளை தீ வைத்து எரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எலத்தூர் ஸ்டேஷன் மற்றும் கொரபுழா பாலம் இடையே மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
@mathrubhumi
ரயிலுக்குள் நபர் தீ வைத்த போது வெளியே குதித்தவர்களின் சடலங்கள் இவை என கூறப்படுகிறது.
விபத்து நடந்த பாலத்திற்கு அருகிலேயே ஆண், பெண் மற்றும் ஒரு குழந்தையின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
@ani
இறந்தவர் கண்ணூரைச் சேர்ந்த பெண் என்றும் அவரது மருமகன் என்றும் உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர். ஆணின் உடல் அடையாளம் காணப்படவில்லை.
ரயிலின் டி1 பெட்டியில் இருந்த மூன்று பயணிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
ரயில்வே போலீசாரும் தீயணைப்பு படையினரும் காயமடைந்தவர்களை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்துள்ளனர்.
தப்பி ஓடிய குற்றவாளி
பலத்த காயமடைந்த பிரின்ஸ் என்ற பயணி பேபி மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பெட்டியிலிருந்த ஒன்பது பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
@ani
ரயிலை நிறுத்த பயணிகள் சங்கிலியை இழுத்ததையடுத்து தீயை மூட்டிய நபர் தப்பிச் சென்றுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேரில் பார்த்த சாட்சியின்படி, தாக்குதல் நடத்தியவர் இரண்டு மண்ணெண்ணெய் பாட்டில்கள், சிவப்பு தொப்பி மற்றும் சட்டை அணிந்திருந்தார் என கூறப்படுகிறது.
@ani
மாநகர பொலிஸ் கமிஷனர் ராஜ்பால் மீனா கூறுகையில், குற்றவாளிகளை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். ரெயில் கொயிலாண்டி ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது.