தங்கள் புதிய வீட்டுக்கு சிமெண்ட் பூசிக்கொண்டிருந்த குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்
இந்தியாவின் ராஜஸ்தானில், தங்கள் புதிய வீட்டுக்கு சிமெண்ட் பூசிக்கொண்டிருந்த ஒரு குடும்ப உறுப்பினர்களை மின்சாரம் தாக்கியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
புதிய வீட்டுக்கு சிமெண்ட் பூசிக்கொண்டிருந்த குடும்பம்
ராஜஸ்தானிலுள்ள Visundani என்னும் கிராமத்தில், ஒரு குடும்பம் தங்களுக்கு ஒரு புதிய வீட்டைக் கட்டிக்கொண்டிருந்த நிலையில், இன்று காலை 7.00 மணிக்கு அந்த குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் வீட்டுக்கு சிமெண்ட் பூசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
பிரேமா தேவி (60), அவரது மகள்களான மாயா தேவி (45), தாரா தேவி (22) மற்றும் மாயாவின் கணவரான கன்வர்லால் (50) ஆகியோர் வீட்டுக்கு சிமெண்ட் பூசியுள்ளார்கள்.
சிமெண்ட் பூசியபின், கன்வர்லால் அந்த சுவர் மீது தண்ணீர் தெளித்துள்ளார். அப்போது தண்ணீர் அருகில் சென்றுகொண்டிருந்த உயர் மின்னழுத்த கம்பியில் பட, மின்சாரம் பாய்ந்து அவர் கீழே விழுந்துள்ளார்.
கன்வர்லாலைக் காப்பாற்ற முயன்ற பிரேமா மற்றும் மாயா மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. தண்ணீர் மூலமாக தாராவுக்கும் ஷாக் அடித்துள்ளது.
உடனடியாக அக்கம்பக்கத்து மக்கள் அவர்கள் நான்கு பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, கன்வர்லால், மாயா மற்றும் பிரேமா ஆகிய மூன்று பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தாராவின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் துயரத்தை உருவாக்கியுள்ள நிலையில், பொலிசார் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |