தப்பித்தவறி கூட சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 3 உணவுகள்- மருத்துவர்களின் எச்சரிக்கை
அனைவருக்குமே மூன்று வேளையும் நன்கு சுடசுட சமைத்து சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும்.
ஆனால் தற்போதைய அவசர உலகில் உணவுகளை சமைத்து வைத்து, பின் தேவையான போது சூடேற்றி சாப்பிட வேண்டிய நிலை உள்ளது.
சமைத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால் ஒரு சில உணவுகளை சூடேற்றி சாப்பிடக்கூடாது.
அந்தவகையில், மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 3 உணவுகளை குறித்து பார்க்கலாம். அப்படி சாப்பிட்டால், அது நஞ்சாக மாறிவிடும்.
1. சாதம்
சமைத்த சாதத்தில் பேசில்லஸ் சிரியஸ் என்னும் பாக்டீரியாவின் ஸ்போர்கள் இருக்கும்.
இப்படி சமைத்த சாதத்தை மீண்டும் சூடுபடுத்தினால் பல பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
இதனால் வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வேறு சில செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
2. உருளைக்கிழங்கு
வேக வைத்த உருளைக்கிழங்குகளை ஒருபோதும் மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது.
இவ்வாறு உருளைக்கிழங்கை மீண்டும் சூடுபடுத்தினால், அது போட்டுலினம் என்னும் நஞ்சை உற்பத்தி செய்யும்.
இது உங்களது செரிமான மண்டலத்தை பாதிக்கும். மேலும் தசைகளையும் பாதிக்கும்.
3. கீரை வகைகள்
அனைத்து வகையான கீரைகளிலும் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன.
இவற்றை சமைத்த பின் மீதும் சூடேற்றும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுகளாக மாறி, பின் நைட்ரோசம்மைன்களாக மாறிவிடும்.
இவ்வாறு கீரையை சூடுபடுத்தி சாப்பிடுவதன் விளைவாக புற்றுநோயை கூட இது உண்டாக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |