கொரோனாவுக்கு 106 நீதிபதிகள் உட்பட 2,768 நீதிமன்ற ஊழியர்கள் பாதிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?
இந்தியா முழுவதும் 106 நீதிபதிகள் உள்பட 2,768 நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் இதுவரை 3 நீதிபதிகள் மற்றும் 34 நீதிமன்ற அலுவலர்கள் உயிரிழந்துள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
மேலும், 106 நீதிபதிகள் உள்பட 2,768 நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் இன்னும் 2 உயர்திநீமன்றங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கவில்லை. விரைவில் அந்த தரவுகளையும் வெளியிடுவோம் என ரமணா கூறியுள்ளார்.
மேலும் தலைமை நீதிபதி ரமணா கூறுகையில், சுமார் 800 பதிவு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் உச்சநீதிமன்றத்தின் 6 பதிவாளர்கள் மற்றும் 10 கூடுதல் பதிவாளர்கள் வெவ்வேறு நேரங்களில் கொரோனாவாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர்களுடன் வீடியோ கால் காலில் பேசிய அவர், "உச்சநீதிமன்றத்தில் எனது சகோதர மற்றும் சகோதரி நீதிபதிகள் உட்பட இந்த தொற்றுநோயால் எல்லோரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுச்செயலாளர், பதிவாளர்கள், உச்சநீதிமன்றத்தின் பெரும்பாலான ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொற்றுநோய் உடலில் பாதிப்ப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உளவியல் மற்றும் மன அழுத்தமானது, பயங்கரமானது. இந்த மனச்சோர்வையும் அச்சத்தையும் தூண்டும் சூழல் இருந்தபோதிலும், ஒவ்வொருவரும் தங்களது சிறந்த சேவையை வழங்குகிறார்கள். நீதி தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதிசெய்கிறார்கள்" என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.