தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் முதல் நாளே மாணவர்களுக்கு மூன்று நற்செய்தி
கடந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் காரணமாக இரண்டு முறை பள்ளிகள் திறப்பு தள்ளிப் போனது.
அந்தவகையில், இந்தாண்டு வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஜூன் 10ஆம் திகதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளிகள் திறப்பை முன்னிட்டு பள்ளிவளாகங்களில் தூய்மை பணிகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 10ஆம் திகதி திங்கள் அன்று மாணவர்களுக்கு மூன்று நற்செய்தி கிடைக்கப் போகின்றன.
மாணவர்களுக்கான 3 நற்செய்தி
1. தமிழக அரசால் சென்னை டிபிஐ வளாகத்தில் அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள் பள்ளிகள் திறக்கும் முதல் நாளே மாணவர்களுக்கு கிடைத்துவிடும்.
2. ஆண்டுதோறும் ஜூன் 3ஆம் திகதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாடப்படும் விதமாக, அனைத்து மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் முதல் நாள் இனிப்பு பொங்கல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3. மாணவர்களின் பெற்றோர் தொலைபேசி எண்களை எமிஸ் இணையதளத்தில் பதிவிடும் பணிகள் நடைபெற்று இதுவரை 1.02 கோடி மாணவர்களின் தொலைபேசி எண்கள் OTP அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், மாணவர்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து பெற்றோர்களின் வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும் வகுப்பறையில் மாணவர்களின் கற்றல், வருகை பதிவேடு, பள்ளிக்கு வரும் நேரம், ஆசிரியர்களிடம் நடந்து கொள்ளும் முறை, தேர்வு மதிப்பெண்கள், என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் போன்ற தகவல்கள் பெற்றோர்களிடம் பகிரப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |