செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கை நட்சத்திர வீரர்கள்.. நேரில் ஆஜராக சம்மன்! வெளியான முக்கிய தகவல்
கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட இலங்கை நட்சத்திர வீரர்களான குசால் மெண்டிஸ், நிரோசன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குண்திலக்க ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறி வெளியில் சுற்றி திரிந்ததற்காக மெண்டிஸ், திக்வெல்ல மற்றும் குணதிலக்க ஆகியோர் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
3 வீரர்கள் பயோ பபுள் விதிமுறைகளை மீறியதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நிமல் திசாநாயக்க தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5 பேர் கொண்ட விசாரணை குழு முன் நரளைா ஆஜராக மெண்டிஸ், திக்வெல்ல மற்றும் குணதிலக்க ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாம்.
ஏற்கனவே, 3 வீரர்களும் இரண்டு குற்றங்களை செய்ததாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.