இந்திய விமானப் படைக்காக ரூ.10,000 கோடியில் 3 அதிவீன உளவு விமானங்களை வாங்க முடிவு
இந்திய விமானப் படைக்காக ரூ.10,000 கோடியில் 3 அதிவீன உளவு விமானங்களை வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதிவீன உளவு விமானங்கள்
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடந்து முடிந்த நிலையில், இந்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 3 உயர் தொழில்நுட்ப உளவு விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒரு திட்டத்தை கொண்டு வர உள்ளது.
இந்த விமானங்கள் எதிரி தரை இலக்குகள் (ரேடார் நிலையங்கள், வான் பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் பிற மொபைல் பொருள்கள் போன்றவை) மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தும்.
இந்திய விமான படையில் தற்போது Bombardier Global 5000, Boeing 707-337C, Gulfstream G100 ஆகிய உளவு விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதனை தவிர இஸ்ரேல் தயாரிப்பான ஹெரோன் ட்ரோன்கள் மற்றும் இந்திய விமானப் படையில் இருந்து விடுவிக்கப்பட்ட மிக் 25 ரக போர் விமானங்களும் உள்ளன.
இந்நிலையில் தான் இந்திய விமானப் படைக்காக ரூ.10,000 கோடியில் 3 அதிவீன உளவு விமானங்களை வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த உளவு விமானங்கள் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் மற்றும் கனடாவின் பாம்பார்டியர் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படவுள்ளது. இதில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரேடார்கள், கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |