உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற குழந்தை: பின்னர் தெரியவந்த திடுக் உண்மை
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்ததாக தெரியவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த குழந்தை
மத்தியப்பிரதேசத்திலுள்ள இந்தூரைச் சேர்ந்த தம்பதியர் பியுஷ் ஜெயின் (35) மற்றும் வர்ஷா ஜெயின் (32).
தம்பதியரின் 3 வயது மகளான விநயா ஜெயினுக்கு 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூளையில் புற்றுநோய் பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.
மருத்துவம் உதவாததால் மதத்தின் உதவியை நாடியுள்ளனர் தம்பதியர். அவர்களுடைய மத குரு ஒருவர், விநயா, Santhara vow என்னும் சடங்கைச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
Santhara vow என்பது, உண்ணாவிரதம் இருந்து உயிர் விடும் சடங்காகும்.
அதன்படி, மார்ச் மாதம் 21ஆம் திகதி இரவு 9.25 மணிக்கு ஆசிரமம் ஒன்றில் உண்ணாவிரதத்தை துவக்கிய விநயா, 40 நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளாள்.
ஆம், இரவு மணி 10.05க்கு மரணமடைந்துவிட்டாள் விநயா!
உலக சாதனை புத்தகத்தால் தெரியவந்த திடுக் உண்மை
விடயம் என்னவென்றால், the Golden Book of World Records என்னும் அமைப்பு சமீபத்தில் விநயாவுக்கு சான்றிதழ் ஒன்றை வழங்க, அதனால்தான் விடயம் வெளியில் தெரியவந்துள்ளது.
ஆம், ஜெயின் மத மதச்சடங்கான Santharaவை மேற்கொண்ட உலகிலேயே இளம் வயது நபர் என்னும் சான்றிதழ் விநயாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து இந்த திடுக்கிடவைக்கும் விடயம் வெளியாக, கடும் சர்ச்சை உருவாகியுள்ளது.
Santhara என்னும் தங்கள் மதச் சடங்கு சட்டப்படியானதுதான் என விநயாவின் தரப்பு வாதிட, அந்தச் சடங்கு ஒருவருடைய சம்மதத்தின்பேரில்தான் நடத்தப்படவேண்டும்.
ஒரு மூன்று வயது குழந்தை எப்படி இப்படிப்பட்ட ஒரு சடங்கிற்கு ஒப்புதல் அளிக்கமுடியும் என கேள்வி எழுப்பியுள்ள மத்தியப்பிரதேச குழந்தைகள் உரிமை ஆணையம், இந்த விடயம் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களை மீறியுள்ளதா என விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |