3 வயது மகனை துடிக்க துடிக்க கொலை செய்த தாய்! பின்னர் தம்பதி எடுத்த அதிரடி முடிவு.. வெளியான அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் 4 வயது மகனை கொன்று பின்னர் மனைவி, கணவர் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசிப்பவர் சுனில் குமார்(39). இவரது மனைவி கிருஷ்ணேந்து(30). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.
சுனில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதி சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சுனில் வீட்டின் கதவு வெகு நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.
இதனால் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் வீட்டின் கதவை தட்ட முயன்றபோது கதவு தானாக திறந்தது. உள்ளே சென்று பார்த்த போது அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
வீட்டின் அறையில் சிறுவன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளான். அடுத்த அறையில் சுனிலும் அவரது மனைவியும் பிணமாக கிடந்தனர். இது குறித்து பரவூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் முதலில் மகனை கொன்றுவிட்டு அதன் பிறகு தம்பதி தற்கொலை செய்திருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.