முகேஷ் அம்பானியிடம் இருந்து ரூ 2.6 லட்சம் கோடி இழப்பீடு கோரும் இந்தியா... தீர்ப்பு மிக விரைவில்

Reliance Mukesh Dhirubhai Ambani
By Arbin Dec 29, 2025 09:09 PM GMT
Report

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசு 30 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை இழப்பீடாகக் கோருகிறது.

பெரும் நிதி இழப்பு

கேஜி-டி6 படுகை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து, ஒப்பந்தத்தின்படி தாங்கள் உற்பத்தி செய்ய வேண்டிய அளவு இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யத் தவறியதற்காக இந்த நிறுவனங்களின் மீது இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

முகேஷ் அம்பானியிடம் இருந்து ரூ 2.6 லட்சம் கோடி இழப்பீடு கோரும் இந்தியா... தீர்ப்பு மிக விரைவில் | 30 Billion Compensation From Reliance

இந்த நடவடிக்கையானது எரிவாயு தொடர்பான ஒரு நடுவர் மன்ற வழக்கை எதிர்கொள்ள வைத்துள்ளது. சொல்லப்படும் பற்றாக்குறையின் காரணமாக, இந்திய அரசாங்கம் பெரும் நிதி இழப்புகளைச் சந்திக்க நேரிடுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கிருஷ்ணா கோதாவரி படுகையின் D6 தொகுதியில் உள்ள இரண்டு ஆழ்கடல் நீர் வயல்களான D1 மற்றும் D3 இலிருந்து எரிவாயு உற்பத்தி தொடர்பான இந்த சர்ச்சை ஒரு தீர்ப்பாயத்தால் 2016 முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது.

முப்படைகளுடன் தைவானை நெருக்கும் சீனா... படைகளைத் திரட்டும் தீவு நாடு

முப்படைகளுடன் தைவானை நெருக்கும் சீனா... படைகளைத் திரட்டும் தீவு நாடு

நவம்பர் 7ம் திகதி இறுதிகட்ட வாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயம் 2026 ஆம் ஆண்டின் மத்தியில் தனது தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி1 மற்றும் டி3 எரிவாயு வயல்கள் இந்தியாவின் முதல் முக்கியமான ஆழ்கடல் எரிவாயு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இவை முதன்முதலில் உருவாக்கப்பட்டபோது, ​​நாட்டை எரிசக்தித் துறையில் தற்சார்புடையதாக்குவதன் மூலம் அதன் எரிசக்தி ஆதாரங்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கருதப்பட்டன.

முகேஷ் அம்பானியிடம் இருந்து ரூ 2.6 லட்சம் கோடி இழப்பீடு கோரும் இந்தியா... தீர்ப்பு மிக விரைவில் | 30 Billion Compensation From Reliance

இருப்பினும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்தத் திட்டம், நீர் கசிவு மற்றும் நீர்த்தேக்க அழுத்தம் தொடர்பான உற்பத்திச் சிக்கல்களையும், அரசாங்கத்துடனான செலவு மீட்புத் தகராறுகளையும் எதிர்கொண்டது.

மட்டுமின்றி, ரிலையன்ஸ் மற்றும் அரசாங்கத்தின் முந்தைய பொது அறிக்கைகளின்படி, தேவையான எரிவாயுவை உற்பத்தி செய்வதிலும் தோல்வியடைந்தது.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு

2012 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட பதிலில், எண்ணெய் அமைச்சகம், D6 எரிவாயு வயல்களில் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு, ரிலையன்ஸ் ஆரம்பத்தில் D1 மற்றும் D3 தொகுதிகளில் இருந்து மீட்டெடுக்கக்கூடிய இருப்புக்களை 10.3 டிரில்லியன் கன அடி (tcf) என நிர்ணயித்ததாகக் கூறியது.

ஆனால், பின்னர் அதை 3.1 டிரில்லியன் கன அடி என சுருக்கியது. தற்போது இந்த நடுவர் மன்ற வழக்கின் மையமாக இருக்கும் எரிவாயுப் பகுதி, தென்னிந்திய மாகாணமான ஆந்திரப் பிரதேசத்தின் கடற்பகுதிக்கு அப்பால் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது.

முகேஷ் அம்பானியிடம் இருந்து ரூ 2.6 லட்சம் கோடி இழப்பீடு கோரும் இந்தியா... தீர்ப்பு மிக விரைவில் | 30 Billion Compensation From Reliance

இந்த எரிவாயுப் பகுதியை 2000 ஆம் ஆண்டில் அரசாங்கம் பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியது. அந்த ஒப்பந்தமானது ஒரு உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்திய அரசாங்கம் ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து 30 பில்லியன் அமெரிக்க டொலர், அதாவது ரூ 2.6 லட்சம் கோடி தொகையைக் கோரி, மிகப்பெரிய கோரிக்கையை முன்வைத்துள்ளது.

மேலும், இந்நிறுவனங்களின் தவறான நிர்வாகமே D1 மற்றும் D3 பகுதிகளிலுள்ள பெரும்பாலான இருப்புக்களை இந்திய அரசாங்கம் இழக்க காரணம் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US