இந்த நோயாளிகளில் ஐந்தில் ஒருவர் கொரோனாவால் பலியாகின்றனர்! வெளியான அதிர வைக்கும் புள்ளி விவரம்
ஏறக்குறைய 30,000 அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு மருத்துவமனையில் கொரோனா தொற்றியதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
குயின் மேரி, லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் Swansea பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தி ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அறுவை சிகிச்கைக்கு உட்படுத்தப்பட்ட 2.6 மில்லியன் நோயாளிகளில், 28,777 பேருக்கு மருத்துவமனையில் தங்கியிருந்தபோதோ அல்லது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய உடனடியாகவோ கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது என ஆய்வில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அறுவை சிகிச்சை நோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இறந்துவிட்டனர், இறப்பு விகிதம் வழக்கத்தை விட 25 மடங்கு அதிகம் என புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
90 நாட்களுக்குள் 6,153 இறந்நதாகவும், தொற்றால் பாதிக்கப்பட்ட அறுவை சிகிச்சை நோயாளிகளில் 21.4 சதவீதம் பேர் இறந்துவிட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்காமல் இறந்த அறுவை சிகிச்சை நோயாளிகள் 0.8 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
முழங்கால் மாற்று அல்லது குடலிறக்கம் போன்ற நோய்களுக்கு அறுவை சிகிச்கைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள் இறப்பது 25 மடங்கு அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.