தமிழகத்தில் ஒரே நாளில் 48 பேர் பலி.. இன்றும் 30,000 கடந்த கொரோனா!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30,055 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று தமிழகத்தில் 30,215 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 6241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் நேற்று 6296 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
சென்னையை தொடர்ந்து இன்று கோவையில் 3763 பேரும், செங்கல்பட்டில் 1737 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31,94,260-ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், கடந்த 24 மணிரேநத்தில் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,312 ஆக அதிகரித்துள்ளது.
30,055 patients test positive for #COVID19 in Tamil Nadu today (January 25). Here is the update. #Corona pic.twitter.com/JXJ23M1B8e
— D Suresh Kumar (@dsureshkumar) January 25, 2022
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 2,11,270 பேர் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 25,221 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் மொத்தம் 29,45,678 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.