இந்தியா-பாக் போர் பதற்றம் அதிகரிப்பு: 32 விமான நிலையங்கள் மே 14 வரை மூடல்
இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்களில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நிலைமை கடுமையாகும் நிலையில், வடமேற்குப் பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்களில் குடிமக்கள் விமான சேவைகள் மே 9 முதல் மே 14, 2025 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அறிவித்துள்ளது.
மூடப்பட்ட விமான நிலையங்கள்:
அதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபோர், பதிந்தா, பூஜ், பிகானேர், சந்திகர், ஹல்வாரா, ஹிண்டான், ஜெய்சல்மேர், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், கண்ட்லா, காங்க்ரா, கேஷோட், கிஷங்கட், குலு-மணாலி, லே, லூதியானா, முண்ட்ரா, நாலியா, பாதான்கோட், பட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட், சர்ஸாவா, ஷிம்லா, ஸ்ரிநகர், தோய்ஸ், உத்தர்லை ஆகியவை.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்த, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பின்தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்திவருவதே இந்த முடிவுக்கு காரணம்.
விமான சேவைகளில் மாற்றம்:
ஏர் இந்தியா, இந்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், பூஜ், அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களுக்கு பயணங்களை ரத்து செய்துள்ளன.
NOTAM-ன் கீழ் வரும் பல நகரங்களுக்கான சேவைகளையும் இண்டிகோ ரத்து செய்துள்ளது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விமான நிலையை சரிபார்க்கவும், மீண்டும் முன்பதிவு செய்யவும் அல்லது பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கவும் ஓன்லைன் இணைப்புகளை வழங்கியுள்ளது.

பாகிஸ்தானின் முயற்சி படுதோல்வி: ட்ரோன் தாக்குதலில் இருந்து ஸ்ரீநகர், அவந்திபோரா விமான தளம் பாதுகாக்கப்பட்டது
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
கடுமையான ஸ்கிரீனிங் நடைமுறைகளுக்கு மத்தியில் பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பு வருமாறு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் (பி.சி.ஏ.எஸ்) அனைத்து பயணிகளுக்கும் இரண்டாம் நிலை ஏணி புள்ளி சோதனைகளை (எஸ்.எல்.பி.சி) கட்டாயமாக்கியுள்ளது, பார்வையாளர் நுழைவை நிறுத்தி வைத்துள்ளது, மேலும் தேவைப்படும் இடங்களில் ஏர் மார்ஷல்களை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த மூடல் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக்கவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |