காதலனால் 14 முறை கருக்கலைப்பு! தொடர் துன்புறுத்ததால் பெண் எடுத்த விபரீத முடிவு.. சிக்கிய கடிதம்
இந்தியாவின் டெல்லி நகரில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த பெண்ணொருவர், காதலரின் தொடர்ச்சியான துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் ஜெய்த்பூர் நகரில் 33 வயதுடைய பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த பொலிசார் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது குறித்த பெண், நபர் ஒருவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.
hindustantimes
குறித்த பெண் எழுதிய கடிதம் ஒன்றை பொலிசார் கைப்பற்றினர். அதில், தனது காதலரால் பலமுறை கர்ப்பமான அப்பெண் 14 முறை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதால் தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் குறித்த பெண்ணின் காதலரான மென்பொறியாளர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் கற்பழிப்பு ஆகிய பிரிவுகளில் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் 7-8 ஆண்டுகள் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.
thehansindia