பிரித்தானியாவில் வாடகை வீடுகளில் வசிக்கும் 35,000 குடும்பங்கள் ஆபத்தில்... விவரம் செய்திக்குள்
பிரித்தானியா போன்ற சில நாடுகளில், no-fault evictions என்னும் ஒரு விடயம் உள்ளது. அது என்னவென்றால், வாடகை வீடுகளில் வசிப்போரை, அவர்களுடைய வீட்டின் உரிமையாளர் எந்த காரணமும் சொல்லாமல், அல்லது எந்த விளக்கமும் அளிக்காமலே, இரண்டு மாத நோட்டீஸ் கொடுத்து, வீட்டைக் காலி செய்ய சொல்லலாம்.
அரசு அளித்த வாக்குறுதி
2019ஆம் ஆண்டு, தெரஸா மே பிரித்தானிய பிரதமராக இருக்கும்போது, இந்த no-fault evictionக்கு தடை விதிக்க இருப்பதாக கன்சர்வேட்டிவ் கட்சியினர் உறுதியளித்தார்கள். அதற்கான மசோதாவும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மசோதாவை நிறைவேற்றுவது தள்ளிவைக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது.
பிரச்சினை என்னவென்றால், இப்படி no-fault evictionக்கு தடை விதித்தால், அது தங்களை பாதிக்கும் என வீட்டு உரிமையாளர்கள் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. விடயம் என்னவென்றால், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு சொந்த வீடு வைத்திருப்பவர்கள், வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள். ஆக, கட்சி அறிவித்த தடையை நிறைவேற்ற, கட்சி உறுப்பினர்களே தடையாக இருக்கிறார்கள்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் என்ன சொல்கிறார்?
வீட்டு வசதித்துறையை கவனித்துக்கொள்ளும் Michael Gove, வீடுகளில் வாடகை வீடுகளில் உட்கார்ந்துகொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வீட்டைக் காலி செய்ய மறுப்போர், மற்றும் வாடகை பாக்கி வைத்திருப்போர் குறித்து என்ன செய்வது என்பது குறித்த தீர்வுகள் எட்டப்படும்வரை இந்த no-fault eviction மீதான தடை நடைமுறைக்கு வராது என்று கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் வாடகை வீடுகளில் வசிக்கும் 35,000 குடும்பங்களுக்கு ஆபத்து
ஆக, இந்த no-fault eviction மீதான தடை அமுலுக்கு வர 2025 ஜனவரி வரை கூட ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரச்சினை என்னவென்றால், அதற்குள், no-fault eviction என்னும் வீட்டுவசதிச் சட்டப் பிரிவு 21ஐப் பயன்படுத்தி (Housing Act 1988 section 21), வாடகை வீடுகளில் வசிக்கும் 35,000 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே, 23,000க்கும் அதிகமான குடும்பங்கள் இந்த சர்ச்சைக்குரிய சட்டப்பிரிவின் கீழ் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், 118,000 பேர் நீதிமன்றங்களுக்கு இழுக்கப்படும் அபாயத்திலும் உள்ளதால், மொத்தத்தில், வாடகை வீடுகளில் வசிப்போர், வீட்டு உரிமையாளர் எப்போது வீட்டைக் காலி பண்ணச் சொல்வாரோ என்ற பதற்றத்துடனேயே வாழும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |