தமிழகத்தில் ஒரே நாளில் 448 பேர் பலி! சென்னையில் சற்று குறைந்தது கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றை விட சற்று குறைந்து 35,873 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 448 பேர் பலியாகியுள்ளனர், இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 20,046 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி(மே 22) ஒட்டுமொத்தமாக 18,06,861 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டள்ளனர், அதில் 15,02,537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர்.
வீட்டில் உட்பட மொத்தம் 2,74,629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், கடந்த 24 மணிநேரத்தில் 25,766 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5559 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது மற்றும் 86 பேர் பலியாகியுள்ளனர்.
35,873 patients test positive for #COVID19 in Tamil Nadu today (May 22). Here is the update. #Corona pic.twitter.com/RskBNtSWzN
— D Suresh Kumar (@dsureshkumar) May 22, 2021
இருப்பினும், சென்னையில் தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 31ம் திகதி வரை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.