வருங்கால மருமகனுக்கு 365 வகையான உணவுகள் சமைத்து அசத்திய மாமியார்! வைரலாகும் புகைப்படம்
ஆந்திராவில் வீட்டிற்கு வந்த வருங்கால மருமகனுக்கு, மாமியார் 365 வகையான உணவுகளை சமைத்து பாரிமாறியுள்ள புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரத்திதைச் சேர்ந்தவர் சாய்கிருஷ்ணா. இவருக்கும் தங்க வியாபாரியான வெங்கடேஸ்வர ராவ் -மாதவி தம்பதியின் மகள் குந்தவிக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.
இன்னும் சில வாரங்களில் இவர்களுக்குத் திருமணம் நடைபெறுகிறது. இதனிடையே மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வீட்டிற்கு வந்த தங்களின் வருங்கால மருமகனுக்கு இந்த பிரம்மாண்ட விருந்தை அவரது மாமியார் அளித்துள்ளார்.
இவர் வருடத்திற்கு 365 நாட்களை கருத்தில் கொண்டு 365 வகையான உணவுகளை சமைத்து அசத்தியுள்ளார்.
இது குறித்து பெண் வீட்டார் கூறுகையில், எங்கள் வருங்கால மருமகன் மீதான எங்கள் அன்பைக் காட்ட, ஒரு வருடத்தில் 365 கணக்கிட்டு அதற்கேற்ப 365 வகையான உணவுகள் ஏற்பாடு செய்தோம் என்று கூறியுள்ளனர்.