இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினருக்கு வெளிநாட்டவரால் ஏற்பட்ட துயர முடிவு
இங்கிலாந்தில், வங்கிக்குச் சென்ற இந்திய வம்சாவளியினர் ஒருவர், வெளிநாட்டவர் ஒருவரால் குத்திக்கொல்லப்பட்ட விடயம் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
இந்திய வம்சாவளியினருக்கு ஏற்பட்ட துயர முடிவு
இங்கிலாந்திலுள்ள Derby நகரில், உணவகம் ஒன்றை நடத்திவந்தவர், இந்திய வம்சாவளியினரான குர்விந்தர் சிங் ஜோஹல் (37).
செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணியளவில், வங்கிக்குச் சென்றிருந்த ஜோஹலை, Haybe Nur Cabdiraxmaan (47) என்னும் சோமாலியா நாட்டவர் கத்தியால் குத்தியுள்ளார்.
X
இந்த தாக்குதல் எதனால் நிகழ்ந்தது என்பது குறித்த எந்த விவரமும் வெளியாகவில்லை.
தகவலறிந்து பொலிசாருடன் வந்த மருத்துவ உதவிக்குழுவினர் ஜோஹல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
Haybe கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |