கொரோனா 3வது அலை... ஜேர்மனியின் நிலை என்ன? சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
கொரோனாவின் 3வது அலை நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் ஜேர்மனியின் நிலை குறித்து நாட்டின் சுகாதார அமைச்சர் Jens Spahn நற்செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை ஜேர்மனியின் தொற்றுநோய் மேலாண்மை குறித்த தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்த Jens Spahn, கொரோனாவின் 3வது அலை குறைந்ததாகத் தெரிகிறது என கூறினார்.
சமூக இடைவெளி நடவடிக்கைகள் மற்றும் விரைவான தடுப்பூசி பிரச்சாரம் ஆகியவை தொற்று வீதத்தை குறைக்க உதவுகிறது.
ஜேர்மன் மக்கள்தொகையில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் சதவிதம் 31.5%-ஐ எட்டியுள்ளது.
வியாழக்கிழமை மட்டும் 9,00,000 பேர் முதல் டோஸைப் போட்டுள்ளனர், சர்வதேச அளவில் ஒப்பீடும் போது ஜேர்மனி வேகமான பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது என என Jens Spahn கூறினார்.
கொரோனா நோய்த்தொற்றுகள் எல்லா வயதினரிடமும் குறைந்து வருகிறது, விரைவில் ஜேர்மனி கொரோனாவை கட்டுப்படுத்தும் என்று தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் லோதர் வைலர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.