ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு... சிரிய இளைஞர் உட்பட பலர் கைது!
ஜேர்மனியில் Yom Kippur புனித நாளன்று யூத வழிபாட்டு தலம் மீதான தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய உள்துறை அமைச்சர் கூறினார்.
புனித நாளான Yom Kippur அன்று ஜேர்மனியின் Hagen நகரில் உள்ள யூத வழிபாட்டு தலத்தை சுற்றி பொலிசார் குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து பொலிசார் கூறியதாவது, குறித்த வழிபாட்டு தலத்தில் தாக்குதல் நடத்த சாத்தியமான அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கிடைத்தது, அதன் காரணமாக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர் என விளக்கமளித்தனர்.
இதனையடுத்து, அச்சுறுத்தல் காரணமாக குறித்த வழிபாட்டு தலத்தில் நிகழ்ச்சிகள் அனைத்து ரத்து செய்யப்பட்டது.
இந்நிலைியல் சம்பவம் குறித்து வடக்கு Rhine-Westphalia மாநிலத்தின் உள்துறை அமைச்சர் Herbert Reul செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, புதன்கிழமை யூத வழிபாட்டு தலம் மீதான சாத்தியமான பயங்கரவாத தாக்குதலை ஜேர்மன் பொலிஸ் முறியடித்துவிட்டனர்.
இந்த தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் 16 வயதுடைய சிரிய இளைஞர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Yom Kippur புனித நாளன்று வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று எங்களுக்கு மிகவும் தீவிரமான மற்றும் உறுதியான தகவல் கிடைத்தது என கூறினார்.