காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தை சேர்ந்த சாருமதி (8), உதய் (8), சரிஷ்மா (6), மனஸ்வி (6) ஆகிய 4 பேரும் விளையாடுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றனர்.
வெளிய சென்ற குழந்தைகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் வெளியே சென்று தேட தொடங்கினர்.
மூச்சு திணறி உயிரிழப்பு
அப்போது மகளிர் மன்றம் அருகே இருந்த காரின் உள்ளே 4 குழந்தைகளும் மயங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
காரின் உரிமையாளர் காரை நிறுத்திவிட்டு கார் சரியாக பூட்டாமல் இருப்பதை உறுதிப்படுத்தாமல் சென்று விட்டார்.
விளையாடுவதற்காக குழந்தைகள் காரில் நுழைந்த பின்னர், காரின் கதவு தற்செயலாக பூட்டிக்கொண்டது. காரின் கதவை குழந்தைகளால் திறக்க முடியாததால், குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.
4 குழந்தைகளின் மரணம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |