ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை! கொரோனா பயத்தால் விபரீத முடிவு
இந்தியாவில் கொரோனா மீது உள்ள பயத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கல்மேடு பகுதி அருகே எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் நாகராஜனுக்கு திடீர் உடல்நலைக்குறைவு ஏற்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நாகராஜன் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
இந்நிலையில் லட்சுமியின் இரண்டாவது மகளான ஜோதிகாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வந்ததால் குடும்பத்துடன் அவதிப்படுவதை விட நிம்மதியாக இறந்துவிடலாம் என ஜோதிகா தாயிடம் கூறினார்.
தாயும் தற்கொலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ஜோதிகா மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் சேர்ந்து 3 வயது சிறுவன் ரித்திஷ் மற்றும் சிவிராஜூவுக்கு வவிஷத்தை கொடுத்து அவர்களும் குடித்துள்ளனர்.
இதையடுத்து 4 பேரும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் ஜோதிகா மற்றும் அவரது மகன் ரித்திஷ் ஆகிய இருவரும் இறந்து கிடந்தனர். ஜோதிகாவின் தாய் லட்சுமி மற்றும் தம்பி சிபிராஜ் ஆகிய இருவரும் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பொலிஸார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.