இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
4 பேர் உயிரிழப்பு
தற்போது இந்தியாவில் பரவும் கொரோனாவானது வீரியம் இல்லாதது. இதற்காக முகக்கவசம் போன்றவற்றை அணிய வேண்டும் என்று இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி பார்த்தால் இந்தியா முழுவதும் மொத்தமாக கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,755 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் 194 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |