ஜேர்மன் மருத்துவமனையில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் நால்வர்: பொலிசாரிடம் சிக்கிய பெண்
ஜேர்மனியில் மருத்துவமனை ஒன்றில் நால்வர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் பெர்லினின் கிழக்கு நகரமான போட்ஸ்டாமில் உள்ள மருத்துவமனையிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.
புதன்கிழமை பிற்பகுதியில் நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இரவு 9 மணிக்கு சற்று முன்னர் அதிகாரிகள் ஓபர்லின் சுகாதார மையத்திற்கு அழைக்கப்பட்டதாகவும், தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார் சடலமாக நான்கு நபர்களையும், பலத்த காயமடைந்த ஐந்தாவது நபரையும் மீட்டதாகவும் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஐவரும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளதாகவும், அதனாலையே மரணம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸ் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உடனடியாக கைது செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர் தொடர்பிலான தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், பாதிக்கப்பட்டவர்கள் அந்த சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எனவும்,
கைதான பெண் அந்த சுகாதார மையத்தின் ஒரு ஊழியர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.