ஒரே நாளில் இடமாறும் ராகு- கேது.., பணக்காரராக மாறப்போகும் 4 ராசிகள்
நவகிரகங்களில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன.
இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரையும், ஒரு நட்சத்திரத்தில் 240 நாட்கள் வரையும் பயணிப்பர்.
இந்நிலையில், தற்போது ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விரு கிரகங்களும் ஒரே நாளில் அதாவது மார்ச் 29ஆம் திகதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளனர்.
இந்த பெயர்ச்சியின் போது ராகு சதயம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலும், கேது மகம் நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளனர்.
அந்தவகையில், ஒரே நாளில் ராகு- கேது இடமாறுவதால் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை காண்பார்கள்.
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- செலவுகள் குறையும்.
- இதுவரை சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
- பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
- திடீர் பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்
- சாதகமான சூழல் உருவாகும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கத் தொடங்கும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும்.
- புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும்.
- ஆரோக்கியம் மேம்படும்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
- நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.

மிதுனம்
- வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
- கடன் தொல்லை நீங்கும்.
- நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வரும்.
- சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
- தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் தீரும்.
- தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
- பெற்றோரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்
- நிதி நிலை உயரும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- கடன் பிரச்சனைகள் குறையும்.
- வங்கி இருப்பு அதிகரிக்கும்.
- குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் தேடி வரும்.
- காதலுக்கு பெற்றோர்கள் பச்சை கொடி காட்டுவார்கள்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |